Monday, February 28, 2011

பிரிவு

பிரிவு ஏற்படுவது ஒருவரை  
ஒருவர் ஏமாற்றுவதால்  மட்டும் அல்ல
இருவரும் ஏமாந்து செல்வதாலும் 

அவளை பிரியும் தருணங்களில்
நான் செய்யும்  செயல்கள் அனைத்தும் 
செயலிலகின்றன

இருவரும் சேர்ந்து இருந்த 
பொழுதுகளில் சிரித்து கொண்டே  
இருந்தோம் . இருவரும் அழுது கொண்டே  
இருக்கிறோம் நம் பிரிவினால் 

எதிர்பாராத  சமயத்தில் உன் முடிவை
கூறினாய் நாம் பிரியலாம் என்று , 
ஏற்கவும் முடியாமல் , மறுக்கவும் முடியாமல் 
நான் இருக்க , நீயோ முற்று புள்ளி வைத்து
முடித்து விட்டாய் நம் நட்பை .
காலத்தை குறை சொல்வதா , 
நம்மை குறை சொல்வதா ?









Friday, February 25, 2011

என் இதயமும் அவள் நினைவுகளும்

என் கண்கள் உறங்கி இருந்தது
நானும் உறங்கி இருந்தேன்
அவளின் நினைவுகளை என் இதயத்திற்குள்
வைத்ததால்  என்றும் அது
உறங்காமல் இருக்கின்றது அவளின் நினைவுகளுடன்





காதல் பயணம்

காதல் பயணம் தொடர்ந்தேன்
சில வருடங்களுக்கு முன்பு
அதன்  தேவைகளை
அறியாமலும் , வீட்டில் சொல்லாமலும்
பக்கத்து தெருவில் ,
பேருந்து நிலையத்தில் ,
அலுவலகத்தில் ,
ஆர்குட்டில் ,
மேச்சென்ஜெரில்
என்று காதல் பிறக்கும்
அனைத்து இடங்களிலும் .
சிலரிடம் நட்பாக பழகினேன் .
அவளிடமும் நட்பாக
பழகினேன் , ஆனால் அவளின்
அன்பான வார்த்தைகளும், நகைச்சுவை உணர்வும்,
புரிந்து கொள்ளும் திறமையும் என்று
எல்லாம் அவளை அழகுபடுத்தின .
அவளை மட்டும் மற்றவர்களிடம் இருந்து பிரித்து
பார்க்க முடிந்தது நட்பிற்கும் மேலாக .
 ஆனால் அவளின் காதல் பயணம்
வேறொருவரிடம் என்பதால் என்
 பயணத்தை முடித்து கொண்டேன் .
நான் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டதால்
யாருக்கும் தெரியாமலே
முடிந்து விட்டதோ ?

Friday, February 18, 2011

சிந்தனை


காதலில் வெற்றி பெற்றவர்களும் , தோல்வி அடைந்தவர்களும்
கவிதை எழுதுகிறார்கள் . நான் எதற்காக எழுத என்று
நீ தான் சொல்ல வேண்டும்
 




Saturday, February 12, 2011

மனிதன்

நம்  தனிமையிலும் , நம் தவறை நினைத்து 
கண்கள் கண்ணீரில் நனைக்க வில்லை என்றால் ,
நாம் மனிதர்கள் அல்ல , மரக்கட்டைகள்


Friday, February 11, 2011

என் நினைவுகள் உன்னை பற்றி

அவளுடன் கை கோர்த்து நடக்க வில்லை
அவள் கன்னம் என் தோள்பட்டையில்  சாய வில்லை
அவள் கால் தடங்கல் என் வழியினில் இல்லை
அவள் கண்கள் பேச வில்லை என்னிடம்
அந்த குயிலின்  குரலையும் கேட்டது இல்லை
ஆனால் எனக்கு காதல் செய்யாமலும் காதல் வலியை கொடுத்து விட்டாள்

காதல் -இது வரை வரையறுக்கப்படாத வார்த்தை அல்ல வரையறுக்கபடாத வாழ்க்கை

அலைகள் கடலின் ஒரு பகுதியாக இருந்தாலும் 
அலைகளுக்கு கடலின் நடுவில்  இடம் இல்லை ,
அவள் கடல் , நான் அலை .
இருப்பினும் அலைகள் ஓய்வது இல்லை .

நட்புக்கும் காதலுக்கும் உள்ள
வித்தியாசத்தை மறந்தேன் உன்னால்

எனக்காக நான் செய்த சத்தியத்தை மீறுவது வழக்கம் ,
உனக்காக நான் எனக்குள் செய்த சத்தியத்தை மீற முடியவில்லையே .




என் வ(லி)ரிகள்

அவளை பற்றி மற்றவரிடம் கூறும்
போது மிஞ்சுவது மனதில் ஒரு புன்னகையும் ,
கண்களில்  இருந்து வெளி வராத
சில கண்ணீர் துளிகளும் ..........

வருத்தத்தை வார்த்தைகளால் கூற முடிந்தது .
சந்தோசத்தை புன்னைகையால் கூறுகின்றேன் .
:-) :-) :-) 


 நீ பேசாமலும் உன்னுடன் பேசி கொண்டு இருக்கின்றேன் 
என் தனிமையில் 


அவளை பற்றி கவிதையில் சொல்லும் போது 
கவிதையும் அழகாகிறது 


 அவள் என்னுடன் இருக்கும் போது என் 
  எடையும் கூடியது , அவள் இல்லாததால் 
  எடையும்  குறைகின்றது .